Welcome, all. Here's where I've written about my travels- mostly historical, and sometimes, not so historical too...in Thamizh. The blog's in Unicode- ye are warned, now.:-)


Enter, and be right welcome!

   


<< April 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30

'Payanangal' so far...

  • Narthamalai
  • Sithannavaasal
  • Kodumbaloor
  • Kudumiyaan Malai
  • 'Sudarsanam' Institute
  • Thirumayam
  • Avudaiyaar Koil
  • Dr.Kalaikkovan's Session

    A Learning Experience

  • Introduction
  • Visalur
  • Malayadippatti
  • Kunnaandaar Koil
  • Gangaikonda Cholapuram - # 1
  • Gangaikonda Cholapuram - # 2
  • Gangaikonda Cholapuram - # 3

    My Other Blogs

    English:
    Odyssey of a Princess

    Thamizh:
    Shangri - La

    Travelogue (English):
    An Ode to History

    My Translation:
    Sivagamiyin Sabadham


    Contact Me

    If you want to be updated on this weblog Enter your email here:




    blogdrive

  • Wednesday, April 07, 2004
    Aavudaiyar Koil

    ஆவுடையார்கோயில்


    For a picture version of this post, go here.

    திருமயத்தை விட்டுக் கிளம்பி, நாங்கள் ‘திருப்பெருந்துறை’ என்னும் ‘ஆவுடையார் கோயிலை’ வந்து அடையும் பொழுது மதியம் மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

    இதுவரை நாங்கள் பார்த்து வந்த கோயில்களைப் போல் அல்லாமல், ஆவுடையார் கோயில் சாலை முழுக்கத் தண்ணீருடனும், வீதி முழுதும் மக்களுடனும், திருவிழாக்கோலத்துடன் எங்களை வரவேற்றது. அன்று ஏதோ விசேஷம் போலும்- எங்கே பார்த்தாலும் பக்திப் பெருக்குடன் மக்கள் வெள்ளம். அவ்வப்போது லாரி லாரியாகத் தண்ணீரை நிரப்பி வீதி முழுதும் இரைத்துவிட்டுப் போனார்கள். ‘சள சள’வென்று சேற்றில் நடந்து ஆவுடையார் கோயிலை நெருங்கினோம். கூரை முழுதும் தோரணங்கள், தரையெங்கும் கிழிந்த வாழை இலைகள், ப்ளாஸ்டிக் குப்பைகள். இங்கும் அங்கும் ஓயாமல் நடமாடும் மனிதர்கள், அழும் குழந்தைகள்.

    இவற்றாலெல்லாம், முன் மண்டபத்தின் ஆளுயரச் சிலைகளின் கவர்ச்சியையோ, ஆவுடையார் கோயிலின் பெயர் பெற்ற கொடுங்கைகளின் வனப்பையோ சிறிதும் குறைக்க முடியவில்லை.

    முன் மண்டபம் வரையிலும்தான் இந்த ஜன வெள்ளம். அதைத் தாண்டிய பின் கோயில் அமைதியான அழகுடன் விளங்கியது.

    சோழநாட்டின் தெற்கு எல்லையாகவும், பாண்டிய நாட்டின் கிழக்கு எல்லையாகவும், தோப்பும் சோலையுமாகச் செழித்திருக்கும் ஊர் திருப்பெருந்துறை. ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னால்...

    பாண்டிய நாட்டை அரிமர்த்தன பாண்டிய மன்னன் ண்டு கொண்டிருந்த பொழுது, தென்னவன் பிரம்மராயன் என்பவர் அம்மன்னனின் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.  பாண்டியர் குதிரைப் படைக்குக் குதிரைகள் வாங்கும் பொருட்டு, அரச ஆணையை ஏற்று, வேண்டிய பொன்னுடன், கிழக்குக் கடற்கரைக்குப் பயணமானார் அமைச்சர்.

    குதிரைகளைப் பார்வையிடுவதற்காகத் திருப்பெருந்துறை வழியே சென்று கொண்டிருந்த அமைச்சர், குருந்த மரத்தடியிலே, சிவபெருமானே குருவாக அமர்ந்து உபதேசம் செய்யும் தேவகானம் காதில் விழ, ‘சட்’டென்று நின்றார். பரவசத்துடன் கேட்கத்தொடங்கினார். அந்த நிமிடமே அவருக்குத் தன் பதவி மறந்துவிட்டது. தான் வந்த காரியம் மறந்துவிட்டது. கையிலிருந்த பொன்னை வைத்துக் கொண்டு, திருப்பெருந்துறையில் கோயில் கட்டுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினார்.

    ‘குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் பொன்னைக் கொட்டி கோயில் கட்டுகிறார்’ என்ற செய்தி கேட்டு எந்த மன்னன் சும்மாயிருப்பான்? தென்னவன் பிரம்மராயரைக் கைது செய்து சிறையில் அடைத்தான் பாண்டிய மன்னன். ‘இந்த நிமிடமே குதிரைகள் வேண்டும்’ என்று த்திரத்துடன் கட்டளை பிறப்பித்தான். அமைச்சர் சிவபெருமானை மனதிற்குள் தியானித்தார்.

    அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. காட்டிலிருந்த நரிக்கூட்டங்கள் குதிரைகளாக உருவம் பெற்றன. அன்று இரவே, அட்டகாசமான அரேபியக் குதிரைகள் அரண்மனையை வந்து அடைந்தன. குதூகலமடைந்த மன்னன் அமைச்சரை விடுவித்தான். மறுநாள் காலையில், குதிரைகள் அனைத்தும் மீண்டும் நரிகளாகியிருந்தன. கடுங்கோபமடைந்த மன்னன் அமைச்சரை மேலும் சித்திரவதைக்குள்ளாக்கினான். இறையருளால் அவற்றை அமைச்சர் வெல்ல, ‘இவர் சாதாரண மனிதரல்ல’ என்பது மன்னனுக்கு உறைத்தது.

       “நரியைக் குதிரைப் பரியாக்கி
       ஞாலமெல்லாம் நிகழ்வித்து
       பெரிய தென்னன் மதுரை யெல்லாம்
       பிச்ச தேற்றும் பெருந்துறையாய்...”

    அமைச்சர் நன்றிப்பெருக்குடன் இறைவனைத் துதித்துப் பாடிய பாடல்கள் அனைத்துமே மாணிக்கத்தைப் போல் சிறப்புப் பெற்றிருந்ததால்- ‘மாணிக்க வாசகர்’ என்று பெயர் பெற்றார். இதுதான் தலவரலாறு.

    அப்படிப்பட்ட மாணிக்க வாசகர் கட்டிய கோயில்தான் ‘ஆவுடையார் கோயில்’. பிற்காலத்தில் பல மன்னர்கள் கோபுரங்களையும், மண்டபங்களையும் சேர்த்துக் கட்டினார்கள்.

    ஆவுடையார் கோயிலின் தனிச்சிறப்பு அதன் கொடுங்கைகள்தான். (கோயில் ஸ்தபதிகள் ‘ஆவுடையார் கோயில் கொடுங்கை நீங்கலாகச் செய்து தருவோம்’ என்று சொல்லித்தான் கோயில் பணி செய்யவே ஒப்புக்கொள்வார்களாம். இந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது என்றும் சொல்கிறார்கள்). மிக மெல்லிய- ஓர் அங்குல கனமேயான தகடுகளாகச் பெரிய கற்களைச் செதுக்கி, அவற்றைத் தாங்க உத்திரங்களையும் செதுக்கிப் பொருத்தியுள்ளனர்.

    இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு- கற்சங்கிலிகள். முழுதும் கல்லினாலேயே செதுக்கப்பட்ட கல் வலையங்கள் ஒன்றிற்குள் ஒன்றாகக் கோர்க்கப்பட்டு, மண்டபத்தின் உச்சியிலிருந்து தொங்குகின்றன. எப்படிப்பட்ட அதிசயம் இது!

    ஆவுடையார் கோயிலில், சிவபெருமான் ‘ஆத்மநாதராக’ எழுந்தருளியிருக்கிறார். இதனால், கருவறையில் லிங்க வடிவம் கிடையாது. அருவமாக இறைவன் காட்சி தருகிறார். கருவறையில் அமைந்திருக்கும் மேடையே ஆவுடையாராகக் கருதப்படுகிறது. இதனால்தான் கோயிலுக்கு ‘ஆவுடையார் கோயில்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

    மாணிக்கவாசகருக்குத் தனி சன்னதி இருப்பதும் இந்தக் கோயிலில்தான். அவர் தீட்சை பெற்றதாகக் கருதப்படும் மரமும், சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மண்டபத்தின் தூணில், மாணிக்க வாசகர் அமைச்சராக, பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்தி, அமர்க்களமாகக் காட்சி தருகிறார். அருகிலிருக்கும் தூண் ஒன்றில், இடுப்பில் ஒற்றை ஆடை தரித்த துறவியாகத் தெரிகிறார்.

    இந்தத் தலமே, மாணிக்க வாசகரின் ‘திருவாசகம்’ தோன்றிய தலம் என்று கூறப்படுகிறது.

    ஆவுடையார் கோயிலின் கொடுங்கைகளை ரசித்துவிட்டு, நீண்ட பிரகாரங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு, சற்று நேரம் முன் மண்டபத்தில் உட்கார்ந்து குதிரைச் சிற்பங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தோம். கோயிலின் முன் வாயிலில் பூஜை அமர்க்களங்கள் முடிந்திருந்தன. சப்தங்கள் அடங்கி, அமைதி சூழ ஆரம்பித்தது.

    மதியம் என்றாலும், கதவுகளைச் சார்த்திக் கொள்ளாமல் எங்களை வரவேற்ற த்மநாதரை இன்னொரு முறை வணங்கிவிட்டு, ஆவுடையார் கோயிலுக்கு விடை கொடுத்தோம். 


     


    Posted at 07:19 am by pavithra
    Make a comment

    Sunday, March 21, 2004
    Thirumayam

    Day 2 (Sunday, June 8, 2003)


    திருமயம்




    குறிப்பு: இந்தக் கட்டுரை 'திசைகள்' இணைய இதழில் வெளிவந்துள்ளது.  For a picture version of this post, go here.

    இரண்டாம் நாள் காலை ஏழரை மணிக்கு, காலை உணவை முடித்துக் கொண்டு திருமயம் நோக்கிப் படையெடுத்தோம்.

    ‘படையெடுத்த’தற்குக் காரணம் இருக்கிறது- திருமயம் என்பது கோயில் மட்டுமல்ல- ஒரு கோட்டையும் கூட. திருச்சிராப்பள்ளி- இராமேஸ்வரம் சாலையில் (NH-210), புதுக்கோட்டைக்குத் தெற்கே 20 கி.மீ தொலைவில் இருக்கும் திருமயத்தை, சாலையிலிருந்து பார்த்தாலே, மலையின் உச்சியில் தெரியும் கோட்டை காட்டிக் கொடுத்து விடும். ரோட்டிலிருந்து பிரியும் மதில்சுவர்களை ஒட்டி வந்தால், ஒரு சந்து திரும்பியவுடன், திருமயம் கோட்டையின் அழகு ‘பளி’ச்சென்று கண்ணில் விரியும்.

    View of the fort

    முந்தைய நாள் எரித்த வெயில் இப்பொழுது காணாமல் போயிருந்தது. மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, குளிர்ச்சியான காலை வேளையில் நாங்கள் கோட்டை வாயிலில் இறங்கினோம். ஒன்பது மணிக்குத்தான் ‘கோட்டைக் கதவுகளை’ (Gate ) ASIக்காரர்கள் திறப்பார்கள் என்று தெரிய வரவே, கோட்டையின் முன்பக்கமான மலைச்சுவரை ஒட்டி நடந்தோம். மலைச்சுவர் சரிவாக மேலேற- ஏறிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் வராது?

    மலைச்சுவர் முடியும் இடத்தில், கறுப்பாக ஒரு பொந்து போல் ஏதோ கண்ணுக்குப் புலப்பட்டதும், அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது. அவசரமாக மேலேறிய பொழுது, சிறிய குகைதான் அது என்று புரிய, மிச்சப் பொழுதை அங்கேயே பாறைகளின் மேல் கழித்தோம். அங்கிருந்து பார்த்தால், மலையை ஒட்டியிருக்கும் பச்சைப் பசேலென்ற குளமும், சற்று தூரத்தில், சாலையை ஒட்டி கண்ணாடியைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்த இன்னொரு குளமும் தெரிந்தன. காலை வேளையின் ‘ஜிலி ஜிலு’ப்பை ரசித்தவாறு அங்கேயே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, மலைச்சரிவுக்கு அருகில் பத்தான கோணத்தில் சாய்ந்து நின்ற பாறை ஒன்றின் மீது ‘ஏறியே தீருவேன்’ என்று அடம் பிடித்த நண்பர்களையும் இழுத்துக் கொண்டு, மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம்.

    ‘கோட்டைக் கதவுகள்’ திறக்கும் நேரத்திற்குள் கோயிலைப் பார்த்துவிடலாம் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட, ‘பைரவர் சன்னதி’யைப் பார்த்துவிட்டு, வேனை நோக்கி நடந்தோம். கோட்டைக்குச் சற்றுத் தள்ளி, மலையைச் சுற்றிக் கொண்டு, சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களுக்கு வந்து சேர்ந்தோம்.

    திருமயம் சிவன் கோயிலின் ஓவியங்களையும், கல்வெட்டுக்களையும் வைத்து, அது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். பிற்காலத்தில், திருமயம் சோழர்கள் கைவசம் வந்து விட்டது. 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் ஹொய்சளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவிட்டு, பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பாண்டியர்களின் கைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியன் ஆகியோரின் காலத்திலிருந்து கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன.

    16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில், ராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் இருந்த திருமயத்தைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் சொல்கிறார்கள்- 1799ம் வருடத்தின் பொழுது, பாஞ்சாலங்குறிச்சியின் வீர பாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இங்கேதான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனராம்/மறைந்திருந்தனராம். எவ்வளவு தூரம் இது உண்மை என்றுதான் தெரியவில்லை. கொசுறாக இன்னொரு தகவல்: சுதந்திரப் போராட்ட வீரர் திரு. சத்தியமூர்த்தி பிறந்த இடமும் திருமயம்தான் (1887 AD).

    திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கத்தின் கோயிலை விட இது பழைமையானது என்றும், அதனாலேயே இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். விஷ்ணு கோயிலுக்குள்ளேயே இரு சன்னதிகள் இருக்கின்றன- வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் ஒன்று. மலைச்சுவரிலேயே குடையப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று. இதில் கோயில் கொண்டிருப்பவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’. திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள், ‘மது கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றுகிறார் என்கிறது தல வரலாறு.


       “மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
       கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
       மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
       கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.”

    என்று திருமங்கையாழ்வார், ‘திருமெய்யரி’ன் புகழ் பாடியிருக்கிறார்.


    View of the fort from the Temple

     

    ‘திருமெய்யரின்’ சந்நதியிலிருந்து வலது பக்கம் சென்று, கோயிலின் மேல் கவிந்திருக்கும் மலைச்சுவரின் அடியில் செல்லும் இடைவெளியில் நுழைந்து வெளிவந்தால், சத்யமூர்த்தியின் ஆலயத்திற்கு வந்துவிடலாம்.

    திருமயத்தில் மொத்தம் பத்தொன்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன- சிவன் கோயிலில் ஐந்து, விஷ்ணு கோயிலில் பதிநான்கு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்(அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச்) சேர்ந்த சில கல்வெட்டுக்கள், சத்யமூர்த்திப் பெருமாளின் சன்னதியின் மேற்கு பிராகாரத்தில் காணப்படுகின்றன. முத்தரையர் தலைவரான சாத்தன் மாறன் என்பவரின் தாயார், குடைவரைக் கோயிலைத் திருப்பணி செய்து, நிதியும் கொடுத்துதவினார் என்கின்றன இந்தக் கல்வெட்டுக்கள். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகளும், 15, 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த விஜயநகர அரசின் கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன.

    சிவன் கோயில் மண்டபத்தின் வலப்புறம் இருக்கும் சுவற்றில், ‘பரிவாதினி-தா’ என்று ஆரம்பமாகும் இசைக்கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டுக்கள், கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கல்வெட்டைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி: கல்வெட்டின் மேல் பகுதியில் 13ம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கடியில் இசைக்கல்வெட்டு உருத்தெரியாமல் அழிந்திருக்கிறது. 13 ம் நூற்றாண்டில் அப்படியென்ன நடந்தது?

    வேறொன்றுமில்லை- சிவன் மற்றும் விஷ்ணுக் கோயில்களின் நிர்வாகத்தினருக்குள் எற்பட்ட சச்சரவு, ஹொய்சள சேனாதிபதி அப்பண்ண தண்டநாயகரால் தீர்த்து வைக்கப்பட்டது. அந்தச் செய்தியைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். (ஆழ்வார்க்கடியானும் வீரசைவரும் அடித்துக் கொண்டது ந்¢னைவுக்கு வரவில்லை?)

    கோயிலுக்கு கிழக்கே, எண்கோண வடிவில், (பாசியின் மிகுதியால்) பச்சை நிறத்தில் ‘பள பள’க்கும் நீருடன், கச்சிதமாக அமைந்திருக்கும் ‘சத்ய புஷ்கரணி’யை ரசித்துவிட்டு, கோயிலிலிருந்து கிளம்பினோம். (‘சத்யகிரீஸ்வரர்’ கோயில் கொண்டிருக்கும் சிவன் கோயிலை நாங்கள் பார்க்கவில்லை. )

    Sathya Pushkarani

    ‘ஊமையன் கோட்டை’ என்று அந்தப் பகுதியில் அழைக்கப்படும் கோட்டையை நாங்கள் நெருங்கிய பொழுது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. கோட்டை வாயிலைத்தாண்டி நாங்கள் உள்ளே பிரவேசித்தோம். பாறையிலேயே குடையப்பட்ட படிகளைக் கடந்து மேலே சென்றால், ஒரு சிறிய கதவு தென்படுகிறது. கதவின் மறுபக்கம் ஒரு பெரிய லமரம். வலது பக்கம் செல்லும் சிறிய ஒற்றையடிப் பாதை. நேர் எதிரே மேலும் படிகள்.

    ஆலமரத்தின் விழுதுகளைப் பார்த்தால் தொங்காமல் விடலாமா என்ன? மரம் ஏறுவதிலிருந்து விழுதில் தொங்குவது வரை எல்லாம் ஒரு புறம் நடக்க, மறுபுறம் ஒற்றையடிப்பாதையின் முடிவு என்ன என்ற விசாரணை நடந்தது. பாதையை நூல் பிடிப்பதுபோல் பிடித்துக் கொண்டே சென்றால், அது இன்னொரு பாறையில் சென்று முடிவடைந்தது. இந்தப் பாறையின் அடியில் இருக்கும் படிகளில் இறங்கினால், ஒரு சிறிய ‘மறைந்த மண்டபம்‘ (நிஜமாகத்தான்!) இருந்தது. வேப்பமரங்கள் கவிந்திருந்த மண்டபத்தின் கூரைமேல் ஏறிப் பார்த்தால்...நேர் எதிரே, செங்குத்தாக ஏறிய மலைச்சுவரில்- ஒரு சிறிய சன்னதிக்குள் சிவலிங்கம்.


    The Sivalinga Sannithi


    இன்னும் மேலே ஏறியவுடன், மலையின் உச்சியில் சென்று கோட்டை முடிவடைந்தது. காற்று ளைத் தூக்கிக் கொண்டு செல்ல, சிலர் கோட்டைச் சுவர் ஓரங்களுக்குச் சென்றனர். மற்றவர்கள் உச்சியில் வைக்கப்பட்டிருந்த பீரங்கியை நோக்கி நடந்தனர். கோட்டையின் அடிவாரத்தில் பரந்து விரிந்த வயல்வெளிகளையும், கிராமப்புறங்களையும், வளைந்து நெளியும் சாலைகளையும் பார்த்து ரசித்தோம். பீரங்கியின் மேல் உட்கார்ந்து 'போஸ்' கொடுப்பதிலிருந்து, கோட்டை சுவற்றிலிருந்து கீஈஈஈழே தெரிந்த குளம் வரையில் எட்டிப்பார்ப்பது வரையில் எல்லாம் செய்த பிறகு, அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவாகியது.

    மலையிலிருந்து இறங்கி வந்து, ஆளுக்கு இரண்டு மூன்று இளநீரை கபளீகரம் செய்த பிறகு ஒரு மாதிரி தாகம் தணிய, பயணத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றோம்.


    Posted at 10:49 pm by pavithra
    Comments (4)

    Thursday, March 04, 2004
    Sudharsanam Research Institute

    ‘சுதர்சனம்’ ஆய்வு மையம்

    For a picture version of this post, go here.

    குடுமியான்மலையைப் பார்த்து முடித்து, வாசலில் பக்கம் பக்கமாக திரும்பி நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும் (இதுவே கொஞ்சம் காமெடியாக இருந்தது. முதலில் யாராவது வாசற்புறம் பார்த்து நிற்கச் சொல்லி எடுப்பார்கள். அடுத்த நிமிடம் யாரேனும் ’இந்தப் பக்கம்’ என்று கத்த, எல்லோரும் about turn அடிப்போம். இப்படியே மாற்றி மாற்றி செய்தப்புறம்தான் குடுமியான்மலைக்கு விடை கொடுக்க முடிந்தது).

    வேனில் ஏறி உட்கார்ந்த பிறகு, ஞானாலயா (இது தமிழ்நாட்டின் தனியார் நூலகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றது)- பார்ப்பதற்குப் பதில் நேராக திரு.சுவாமிநாதனின் ‘சுதர்சனம்’ ஆய்வு மையத்திற்குச் செல்லலாம் என்று முடிவாகியது.

    புதுக்கோட்டையின் எல்லையில் அமைந்த ‘சுதர்சன’த்தை நாங்கள் அடைந்த பொழுது இரவு மணி எட்டு. சலவைக்கல் தளத்துடன் ‘பள பள’ வென்று இருந்த ‘சுதர்சன’த்தின் மூன்றாவது மாடிக்குச் சென்ற பொழுது, கையும் காலும் ஓய்ந்து போய் வந்திருந்த எங்களுக்கு திரு.சுவாமிநாதனின் விரித்துப் போட்ட நாற்காலிகளும், குளிர்பானங்களும் அமிர்தமாக இருந்தன. திரு. சுவாமிநாதனே எங்களை புன்னகையுடன் வரவேற்றார். 

    கமல் தன் handy-camஐ அறை வாயிலில் அமைக்க, ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பிறகு, அன்றைக்கு நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றிய விவாதம் ரம்பித்தது.

    திரு.சுவாமிநாதன் தன்னுடைய ஆய்வு மையத்தின் உதவியாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ‘சுதர்சன’த்தின் குறிக்கோள்களையும் (புதுக்கோட்டையின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிக் கொண்டு வருவது), தற்போது அவர்கள் செய்து வரும் projectகளையும் விவரித்தார். பழைமையான கல்வெட்டுக்கள் சிலவற்றைப் படியெடுத்து, தமிழில் அவற்றைக் கொடுத்து, அவற்றைப் படிப்பது எப்படி என்ற சிறு குறிப்புக்களுடன் தயார் செய்திருந்த அட்டைகளைக் காண்பித்தார். தனிப்பட்ட முறையில் அவர் தயார் செய்த ல்பங்கள் பலவற்றையும் காண்பித்தார்.

    அவற்றையெல்லாம் பார்க்கையில் அவரது உழைப்பும், சரித்திர சம்பந்தமான விஷயங்களில் அவருக்கிருந்த ஆர்வமும், ‘சுதர்சனம்’ ஆய்வு மையத்தின் வெற்றியும் நன்கு புரிந்தது.

    ‘அட, அதிகம் இல்லை- அவரவர் தங்கள் தங்கள் சொந்த ஊரைப் பற்றிய சரித்திரத்தையாவது தெரிந்து வைத்துக் கொண்டு, அதன் மகோன்னதத்தை அடுத்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவன். என் சொந்த ஊரின் சரித்திரத்தை நான் அல்லவா பெருமைப்படுத்த வேண்டும்?’- இதுதான் அவரது கருத்து.

    உண்மைதான் அல்லவா?

    இறுதியாக, திரு.சுவாமிநாதனிடம் விடைபெற்றுக் கொண்டு, ‘சுதர்சன’த்திலிருந்து கிளம்பி நாங்கள் மறுபடியும் Prince Lodge வந்து சேர்ந்தோம். இரவு மணி பத்திற்கு கிடைத்த ஓட்டலில் கிடைத்த டிபனை முழுங்கிவிட்டு, அவரவர் அறைக்குச் சென்று முடங்கிவிட்டோம்.


    Posted at 09:12 pm by pavithra
    Make a comment

    Thursday, February 19, 2004
    Kudumiyaan Malai

    குடுமியான்மலை

    For a picture version of this post, go here.

    அந்தி மாலை வேளைக்கு எப்பொழுதும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. எப்பேர்ப்பட்ட இடமும், சூரியன் மறையும் பொழுதில் மிக மிக அழகாகத் தோன்றும். அழகற்ற இடங்களுக்கே இப்படியென்றால், உயர்ந்த மலையைப் பின்னணியாகக் கொண்ட குடுமியான்மலை எப்படியிருக்கும்?

    புதுக்கோட்டை-மணப்பாறை-கொடும்பாளூர்ச் சாலையில் 20 கி.மீ தொலைவில் இருக்கும் குடுமியான்மலைக்கு நாங்கள் வேனில் ஒரு குலுக்கலுடன் நின்ற பொழுது, மாலை மணி ஆறேகால்.

    நிமிர்ந்து பார்த்தபொழுது, கோயிலின் கோபுரத்தைத் தாண்டி மலை உயர்ந்து நின்றது. மலைக்குப் பின்னால் இறங்கும் சூரியக் கிரணங்கள் ஒரே ஒரு நிமிடம் ஒளிபாய்ச்சி விட்டு, ‘சட்’ டென்று மறைந்தன. வாயிலில் சற்றே தாமத்தித்துவிட்டு, உள்ளே நுழைந்தோம். அப்படி நுழைந்த பிறகுதான், குடுமியான்மலையின் சிறப்பு எப்படிப்பட்டது என்பது எங்களுக்குப் புரிந்தது.

    A Silai at KudumiyanMalai


    முற்காலப் பாண்டியர்களின் காலத்தில்- அதாவது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டில், சிறிய குடைவரைக் கோயிலாக மட்டுமே இருந்த குடுமியான்மலை, வருடங்கள் செல்லச் செல்ல, மெல்ல மெல்ல பெரிய கோயிலாக உருவெடுத்தது. குடுமியான்மலைக்கு அக்காலத்தில் வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன- ‘திருநலக்குன்றம்’ என்பது ஒரு பெயர். ‘திருநிலக்குன்றம்’ என்பது இன்னொரு பெயர். இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தில் ( 1146-1163) சிகாநல்லூர் என்ற பெயரும் வழக்கில் இருந்திருக்கிறது.

    AD 1215- 1265 வருடங்களுக்குள், கோயில் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

    கோயில் வளாகத்திற்குள் மொத்தம் மூன்று கோயில்கள் உள்ளன- மேலக்கோயில் அல்லது திருமேற்றளி என்பது ஒன்று, சிகாநாதர் அல்லது குடுமிநாதரின் கோயில் இரண்டாவது, சௌந்தரநாயகியம்மன் கோயில் மூன்றாவது. இவை தவிர, மலை மீது முருகப்பெருமானுக்கும் ஒரு கோவில் உண்டாம்.

    உள்ளே மண்டபத்திற்குள் நுழைந்தவுடன், முதலில் கண்ணில் படுவது- ஒவ்வொரு தூணிலும் இழைக்கப்பட்டிருக்கும் ளுயரச் சிற்பங்கள். சிற்பங்கள் பலவிதம்- ஒவ்வொன்றும் ஒரு விதம். புன்னகையுடன் அருள்புரியும் கணபதி, இராவணன், ஆஞ்சநேயர்...அருகில் இருக்கும் மண்டபங்களின் தூண்களில் சில சாய்ந்து, இடிந்து போயிருக்கின்றன. ‘உள்ளே நுழைவது ஆபத்து’ என்று போர்டே வைத்திருக்கிறார்கள்.

    கருவறைக்குள்ளே குடுமிநாதர் (அல்லது சிகாகிரீஸ்வரர்), உச்சியில் குமிழ் போன்ற ஒன்றுடன் காட்சி தருகிறார் (சுயம்புலிங்கம் என்று சொல்கிறார்கள்).

    குடுமிநாதர் சன்னதியின் வெளிப் பிரகாரத்தைத் தாண்டி வந்தால், சௌந்தரநாயகி அம்மனின் சன்னதிக்கு வரலாம். எளிமையாக, அதிக அலங்காரங்கள் அற்று விளங்குகிறது. ஒரு சிறிய கிணற்றுக்கு அருகில், அம்மன் சன்னதியின் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து இளைப்பாறினோம்.

    Another silai

    பொதுவாகக் கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கும்- யார் கட்டியது, எப்போது கட்டியது, யார் பராமரிப்பது, அதற்குரிய நிவந்த விவரங்கள் போன்ற விஷ